Monday, January 24, 2011

Wednesday, January 12, 2011

Swami Vivekanandar Jayanthi -JAN 12

  Rashtriya Swamsevaka Sangh
Cuddalore jilla

    
   Namasthe''

    '' Swami  Vivekanandar Jayanthi'' was celebreated very joyfully in various  palce's & college's  at Cuddalore Jilla

 * Periyar arts college  -182 students
*krishnasamy college of engg-more than 200 students
*Annai Velankani politecnic -217 students
*Sakthi ITI -180 students
*Annamalai Univercity -more than 150 students
*Arts college -c.mutlur -more than 200 students

 (1200 national Youth day cards distributed in our jilla)
&
simillarly our swayamsevaks conducted many place's
like
Kandarakottai
kumarachi
pudupalayam
chidambaram
panruti
neively
virudhachalam
..........

our 
Sri.L.Natarajan ji was guided in some programme's
...............................................................................................................................................................

         Thanks to all        
12-01-2011
   

National Youth Day

Annai Velankanni polytecnic college
panruti

 

Sri.L.NATARAJAN JI  & Principal M.SAVAYA RAJ
Sri.HEMANTH (from left)-vasavi club

National Youth Day-PAC

National Youth day
PAC
182 -student's
12-staff's
The programme events all are contcted in presence of  principal




they are all taking voth in
swami vivekanand ji words

National Youth Day


National Youth Day
12-01-11
@
cuddalore

periyar arts college




சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்

 

image330“அனைத்துப் படைப்புகளும் ஒன்றே” எனும் ஒற்றுமையை பாரதத்தின் வரலாறு முழுக்க வேதாந்தம் வலியுறுத்தி வந்துள்ளது. அதனால், இந்த ஒற்றுமையை மானுடர்கள் தன் ஆன்மாவில் உணர முடிந்தது. ஆனால், ஏற்றதாழ்வுகளும் சாதி உணர்வும் அதிகார அந்தஸ்து பேதங்களும் இந்த ஆன்மிக சமத்துவத்தை தனிமனிதன் உணராதவாறு செய்கின்றன என்பதும் வரலாறு.
இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றதாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத்தாழ்வை மீறியும் எதிர்த்தும் அனைத்து மக்களும் ஆன்ம சொரூபியரே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.
அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைவகரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள் ஆவர். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டர்களாகப் போற்றப்படுகின்றனர். [ஆன்மீக சக்தியைத் தூண்டும் மந்திரங்களைக் கண்டறிந்தவர்கள் மந்திர த்ருஷ்டர்கள். உதாரணமாக, காயத்ரி மந்திரத்தைக் கண்டறிந்த விசுவாமித்திரர் ஒரு மந்திர த்ருஷ்டர்.]
vivek2வரலாற்றுக் காலங்களில் அந்த சமத்துவ ஞானக்குரல் புத்தர் மூலமாக ஒலித்தது. சங்கரர் மனீஷா பஞ்சகம் மூலம் காசியில் அதே வேதாந்த மானுட நேயத்தை பிரகடனம் செய்தார். ராமானுஜர் வைணவத்தை அனைத்து மக்களையும் அணைக்கும் ஆன்மிக மக்கள் இயக்கமாகக் கண்டார். தாழ்த்தப்பட்டவர் கொண்டு வந்ததால், அவர் கொண்டு வந்த எள்ளை சுவாமியின் நைவேத்யத்திலேயே சேர்த்தார் ராகவேந்திரர்.
இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண-விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாகத் தாண்டிய நிலையில், தனது தலை முடியால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார் விவேகானந்தர். சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள் மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை சிறுவயதிலேயே விவேகானந்தர் உடைத்தார்.
தொடரும் இந்த பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் அம்பேத்கர் ஆவார். அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத்திறனும் கொண்டவராக இருந்தார். அவரது குடும்பம் ராமானந்த-கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும்.
சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் அம்பேத்கர். அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். உதாரணமாக, காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார்.
இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.
சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
பாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன ?
ஒருமைப்பாடே பாரதத்தின் அடிப்படைத் தன்மையாக உள்ளது. இந்த அடிப்படைத் தன்மையின் இயற்கை என்ன ?
சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்,
‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1
p08அரசியல் அதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகள் மட்டுமே ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கின்றனவா எனும் கேள்விக்கு பின்வருமாறு அம்பேத்கர் பதிலுரைக்கிறார்,
‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2
சமுதாய பிரச்சினைகள் பற்றி அறிய இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது என்பது அம்பேத்கரின் கருத்து.
ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்:
“இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா?
அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்?
ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன?
‘இந்தியா’ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா ?
பல தேசிய இனங்களின் தொகுப்புதானே இந்தியா?”
இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர் டாக்டர். அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் ?
இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.
ஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
aryans-011
‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும்.
சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன்.ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல.’ 3
டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக வேதங்களை தாமே கற்றறிந்தவர். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த இனரீதியான தவறான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அவருக்குத் தந்தன. உதாரணமாக, அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார்.
டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.
‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:
1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4
நாம் வாழவேண்டுமென்றால்
ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் களைய வேண்டும். இந்த அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்,
‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால், ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…
நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘5
இதே கருத்தை அம்பேத்கரும் கூறியுள்ளார். காத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்,
‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘6
சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்
sanskrit2ஸ்வாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதன் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்.
சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார்:
‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’7
“தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்” எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்,
‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.’
மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அதுவே சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் வழி என்றும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டார் அவர்.
அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடத் தன்மையற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்திருக்கலாம்.  இருந்த போதும் இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  எனவேதான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.
sikh-festivalsபுத்த வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அவர் குரு கோவிந்த சிங்கின் கால்ஸா பாதையை டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார். சுவாமி விவேகானந்தரையும் மிகவும் ஆகர்ஷித்த ஒரு ஆன்மிக வடிவமாவார் குரு கோவிந்தர்.
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனைப் போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”
என்று விவேகானந்தர் முழங்கினார்.9
பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது. புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.
‘புத்தசமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.”
என அவர் கூறினார்.10
அம்பேத்கருடன் நடந்த சந்திப்பு ஒன்றில், இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியர் என சுவாமி விவேகானந்தரை அம்பேத்கர் கருதியதாக ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி பதிவு செய்திருக்கிறார்.11
பாரதம் குறித்த அடிப்படையான பார்வை குறித்தும், பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும். இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது?
சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுட துன்பத்தைக் கண்டு இரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுட துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையை துறந்து அதற்காக உழைத்தனர். அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்
  1. லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III
  2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter-IV
  3. சுவாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
  4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII,
  5. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். VII
  6. டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
  7. சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
  8. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.
  9. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். III
  10. சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை 26 செப்டம்பர் 1893
  11. எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3: http://jeyamohan.in/?p=4715

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

 

ஆக்கம்: மோகனா சூரியநாராயணன்
(ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளியானது)
swami-vivekananda-quotes1உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் கீதை, திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுகின்றன.  தீர்ப்பிற்கு அவை வலுசேர்க்கின்றன.
ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் முறையாகச் சட்டப் பிரிவுகளின்படி, எடுத்த முடிவிற்கு வலுவூட்ட சேர்க்கப்பட்ட காரணம் அது என்று அவற்றிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது.  ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார்.
நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம் பெற்றுள்ள சுவாமிஜியின் கருத்துகளை காண்போம்.  - ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர்.
______________________________________________________________________________
மடத்துப் பணியாளர் ஒருவர் தவறு செய்துவிட்டதால் அவரை இனி மடத்திற்குள் வர வேண்டாம் என்று உத்தரவிட்டார் சுவாமிஜி.  தண்டனை பெற்றவரோ அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தஞ்சமடைந்து, அவரது சொற்படி மறுபடியும் மடத்திற்குச் செல்கிறார்.
நடந்ததை அறிந்த சுவாமிஜி, ‘அன்னையின் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ஒப்பானது. அதற்கு மேல்முறையீடு இல்லை’ என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்துகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மேல் முறையீடு செய்ய நம் நாட்டில் எந்த நீதிமன்றமும் கிடையாது.
அத்தகைய உச்சநீதிமன்ற வழக்குகள் சிலவற்றிலேயே சுவாமிஜியின் தீர்க்க தரிசனக் கருத்தகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. அவை இங்கு தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீடு வேண்டுமா?
இந்தியச் சமுதாயம் சமச்சீருடன் பீடுநடை போடவேண்டுமானால் பின் தங்கிய மக்களை வேகமாக முன்னேற்ற வேண்டும்.  முன்னேறி வரும் மற்றவர்களுடன் அவர்கள் இணைய வேண்டும்.
இதற்காகவே அரசியல் நிர்ணய சட்டத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பிரிவினருக்கு ஒரு சலுகையைத் தருவதும் மற்றொரு பிரிவினருக்கு அதைத் தராமல் இருப்பதும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற சிந்தனைக்கு விரோதமானது.
நெடுங்காலமாகப் பிற்பட்ட நிலையிலிருக்கும் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் நியாயமானவை என அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் முடிவு செய்து, அந்தமுடிவிற்கு ஆதரவாக சுவாமிஜியின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுகிறது.
Akhil Bharatiya Soshit Laramchari Sangh Rly. Vs. Union of India (1981) 1 SCC 246.
 ‘இனப்பாகுபாடு காரணமாக, ஹரிஜனங்களைக் காட்டிலும் கல்வி கற்பதில் அந்தணர்கள் அதிக நாட்டம் காட்டுகிறார்கள் என்றால் அந்தணர்களின் கல்விக்காகப் பணம் செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் ஜரிஜனங்களுக்காகச் செலவிடுங்கள்.  பலவீனர்களுக்குக் கொடுங்கள்; ஏனெனில் உங்கள் கொடை அங்குதான் தேவை.’ சுவாமி விவேகானந்தர்.
jaipurprobably-1891-2ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு நியாயமானதே என்று கூறும் கர்நாடகா - அப்பாபாலு இங்கலே வழக்கின் தீர்ப்பிலும், 1995 SUPP 4 SCC 469 Para 19)
‘என்னைத் தீண்டாதே; என்ற வாக்கியத்துடன் எங்களை நாங்கள் அடையாளம் காட்ட விரும்பவில்லை.  அது இந்துமதமல்ல இது நமது எந்த நூலிலும் இல்லை.  இது நமது தேசிய வாழ்வில் குறுக்கிட்டுவிட்ட ஒரு மூடநம்பிக்கை’ என்ற சுவாமிஜியின் ஆணித்தரமான சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீடு சரியானதே என்று கூறும் பிரபல இந்திரா சஹானி வழக்கிலும் நீதிமன்றம்,
’ஜாதியோ ஜாதி இல்லையோ, கொள்கைகளோ அவை இல்லையோ, தனி நபரின் சிந்தனைச் சுதந்திரம் மற்றும் செயற்சுதந்திர ஆற்றலை - அந்த ஆற்றலால் பிறருக்குக் கேடு உண்டாகாதவரை - தடுக்கின்ற மனிதன், வகுப்பு, ஜாதி, நாடு, அமைப்பு என்று எதுவானாலும் அது சனியன்தான்; அது ஒழிந்தே ஆகவேண்டும்’ (ஞானதீபம் - சுடர் 9, பக்கம் 227)
என்ற சுவாமிஜியின் கருத்துகளுடன் தனது தீர்ப்பிற்கு வலுசேர்த்தது.
உண்மையான கல்வி
அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளுள் ஒன்றுதான் ‘கல்வி கற்பதற்கான உரிமை’.
’இனாம்தார்-மகாராஷ்டிரா மாநிலம் வழக்கில்’ கல்வி என்றால் என்ன என சுவாமிஜி கூறிய கல்வியின் இலக்கணம் மேற்கோளாகப் பயண்படுத்தப் பட்டுள்ளது:
‘… ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி’
மதம் எங்கே இருக்கிறது?
‘மதம் என்பது கொள்கைகளில் இல்லை; கோட்பாடுகளில் இல்லை.  அறிவுபூர்வமான பேச்சுக்களில் இல்லை.  அது வாழ்வதும் வளர்வதும் ஆகும்.’
சுவாமி விவேகானந்தரின் இந்தக் கூற்றைப் பரபரப்பான ராமஜன்ம பூமி தீர்ப்பில் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள நீதிபதி ஜே.எஸ். வர்மா, ‘இந்தச் சர்ச்சையின் வேர்களைப் பற்றி சிந்திக்கும்போது என் மனதில் சுவாமிஜியின் கருத்து எழுகிறது’ என்று கூறினார்.
அடிப்படை உரிமை பாதுகாப்பு
இந்தியக் குடிமகனுக்கு இந்தியாவில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று தீர்ப்பளிக்கப்பட்ட மனேகா காந்தி - இந்திய யூனியன் வழக்கில் ‘பாரதம்’ தன்னைச் சுருக்கிக் கொண்டதைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் நீதிபதி, சுவாமிஜியின் இந்த வாக்கை மேற்கோள் காட்டுகிறார்.
vivekananda_with_sara-bull‘இந்தியாவின் துன்பத்திற்கும் வீழ்ச்சிக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று, அது தன்னைக் குறுக்கிக் கொண்டதாகும்;  முத்துச்சிப்பி தன் வாயை இறுக்கமாக மூடிக்கொள்வதுபோல் தனது பொக்கிஷங்களைப் பிற இனத்தினருக்குத் தர மறுத்ததாகும்.
‘….பிற நாடுகளுக்கு உயிர்ச் சக்தி அளிக்கின்ற உண்மைகளைத் தர மறுத்ததாகும்.  நாம் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை; சென்று பிற இனங்களையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இல்லை என்ற அளவில் நம்மைக் குறுக்கிக்கொண்டு விட்டோம்.’
லட்சிய ஆசிரியர் வேண்டும்
அவினாஷ் நாகரா - நவோதயா வித்யாலயா சமிதி வழக்கில் ஆசிரியர்களின் கடமைகளையும் உரிமைகளையும் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தரின்,
‘நெருப்பு போன்ற களங்கமற்ற ஒழுக்கம் உடையவர்களுடன் இளமையிலிருந்தே சிறுவர்கள் வாழவேண்டும்; அத்தகைய உதாரண புருஷர் ஒருவரை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்; காலங்காலமாக நமது நாட்டில் துறவிகளே கல்வி கற்பித்து வந்தார்கள்.  துறவுமிக்கத் தியாகிகள் கல்வி கற்பித்த நாள்வரை இந்தியா எல்லா வளங்களும் பொருந்தியதாகத்தான் இருந்தது; (பக்கம் 88 எனது பாரதம் அமர பாரதம்)’
 என்பது மேற்கோளாகக் காட்டப்பட்டது.
எது மதம்?
நாரயண தீக்ஷிதலு- ஆந்திரபிரதேஷ் அரசு வழக்கில் எது மதம் என்பதைத் தெளிவாக்க உச்சநீதிமன்றம் சுவாமி விவேகானந்தரின் உரைகளையே முழுவதும் சார்ந்திருந்தது.
ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடக்கிய தெய்விகம் நிறைந்தது.  புற-அக இயற்கைகளை அடக்குவதன் மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம்.
‘செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனை கட்டுப்படுத்தல் அல்லது ஆராய்ச்சி இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ, இதனைச் செய்து சுதந்திரனாக இரு!’ (பக்கம் 122 எனது பாரதம் அமரபாரதம்)
என்று எது மதம் என்பதை விளக்கும் பதிலுரைகள் கொடுக்கப்பட்டு ‘நாங்கள் சகிப்புத்தன்மையை நம்புவதோடு எல்லா மதங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறோம்’ என்ற சுவாமிஜியின் உரை முத்தாய்ப்பாக விளங்குகிறது.
vivekananda_san_francisco-1900-seated-4‘பல்பீர் கௌர் - ஸ்டீல் அதாரிடி ஆஃப் இந்தியா’ மற்றும் லிடரேட் டெய்லி வேஜஸ் எம்ப்லாயிஸ் அஸோசியேஷன் (படித்த தினக்கூலி தொழிலாளர் சங்கம்) வழக்குகளில் ‘மனித உரிமையை நிலைநாட்டும் தீர்ப்புகளில் நீதிபதிகள் அரசியல் சட்டங்களின் மூலம் அளிக்கப்படும் வசதிகள் சாதராண மனிதனைச் சென்றடைவதில்லை.  அவை சட்டப் புத்தகங்களின் காகிதங்களிலேயே உள்ளன’ என்று கூறும் நீதிபதி ‘சுவாமி விவேகானந்தர் வேறு ஒரு சூழ்நிலையில் கூறியவை, இந்தியாவை நல்லமுறையில் விரைவில் மாற்றியமைத்து அரசியல் நிர்ணய சட்டத்தின் தந்தையர்கள் கண்ட கனவுகளை நனவாக்கப் பயன்படும்’ என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
சுவாமிஜி கூறியது: ‘எல்லா யோகங்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.  அவற்றைப் பற்றிய வெறும் தத்துவங்கள் நன்மை செய்யா.  நாம் அவற்றைக் கேட்க வேண்டும், அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், காரணகாரியங்களை ஆராய்ந்து மனதில் பதிவு செய்துகொண்டு அவை நம் வாழ்வின் பகுதியாக மாறும்வரை தியானித்து உணரவேண்டும்.
 ‘சமயம், சிந்தனைகள், தத்துவங்கள் இவற்றின் மூட்டையாக, அறிவுஜீவிகளுக்கு மட்டுமே உரிமையானதாக இருக்கக்கூடாது.  நமது அறிவினால் இன்று சில முட்டாள்தனமான வேலைகளைச் செய்யலாம்.  நாளைக்கே அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.  ஆனால் உண்மை சமயம் மாறுவதே இல்லை…’
ஸ்ரீராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் உபதேசங்களினால் பெரிய சமுதாய மாற்றமே நிகழ்ந்துள்ளது என்கிறது உச்ச நீதிமன்றம்.  ஓர் உதாரணம் இதோ :
ஹரிஜனங்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுத்த வழக்கில் (AIR 1966 SC 1119: Page 37), இந்து மதம், அதன் கோட்பாடுகள் இவற்றைச் சற்று ஆராய்ந்த நீதிமன்றம் காலப்போக்கில் தோன்றிய பல மத அமைப்புகளைப் பட்டியலிட்டு இறுதியாகக் கூறியது:
’ராமகிருஷ்ணர் - விவேகானந்தரின் உபதேசங்களால் இந்துமதம் மிகுந்த வசீகரமாக, முற்போக்குச் சிந்தனையுடன் செயல்துடிப்புடன் கூடிய வடிவில் மலர்ந்தது’.
ஒரு குறிப்பிட்ட இந்து ஆலயத்தில் நுழையவும், வழிபாடு செய்யவும் ஹரிஜனங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.  ஆனால், உச்சநீதிமன்றம் அந்த உரிமையைத் தந்தது.
shillong‘ஜாதி, பிறப்பு, பலவீனம், பலம் இவற்றைக் கடந்து எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், பலவீனன், பலம் பொருந்தியவன் எவராயினும் ஒவ்வொருவரிடமும் அந்த எல்லையற்ற ஆன்மா இருக்கிறது.  அது ஒவ்வொருவருக்கும் எதையும் சாத்தியமாக்கும், எல்லையற்ற சக்தி, ஆற்றல் இருப்பதால் யாரும் சிறந்தவனாகவும் நல்லவனாகவும் ஆகமுடியும் என்ற திடமான உறுதியை அளிக்கிறது.  ஆகவே நாம் ஒவ்வோர் ஆன்மாவிடமும் ‘எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாதிரு’ என்று சொல்வோம், நம்பிக்கை அளிப்போம்’
(Akil bharatiya Soshit Karamchari Sangh Rly. Vs. Union Bank of India (1981) 1 SCC 246) என்ற சுவாமிஜியின் உரை ஒட்டுமொத்த இந்தியர்களையும் தட்டி எழுப்பும் பிரகடனமாக உள்ளது.
பிரிவினைகளே இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.  நம் நாட்டின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பற்றிய சிறந்த கருத்துகளும் கூறியுள்ளார்.
அவரது முடிவுகள் மேலோட்டமானவை அல்ல; மிக மிக ஆழமானவை.  வரலாறு காட்டும் பாடங்களையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு காணப்பட்டவை.  அவை என்றென்றும் நம்மை வழிநடத்தும்.

Friday, January 7, 2011

it's happend

Thailapuram, off Chengalpattu in Kanchipuram district (Tamilnadu, Bharat) 

          celebrated the Deepam Utsav as a social festival on November 21, 2010. Usually, lighting of lamps in every Hindu household marks the Deepam festival. The event was unique that day in many ways. The nation (represented by a huge map of undivided Hindusthan – Akhand Bharat - drawn on the open ground in the middle of the village) was the centre of the ceremony. Mud lamps (Diyas) with the wick and gingelly oil were placed all along the borders of the country in the map.  Every holy city inside the borders was indicated by a similar lamp each, with wick and oil. At the outset, functionaries of political parties – AIADMK, DMK, PMK, etc., - responded happily to the call of the organizers and lit a lamp each, positioned at each holy city inside `Hindusthan'.  So did the caste leaders of several castes one by one. All cities from Amarnath in the Himalayas via Ayodhya down to Kanyakumari in the south were lit by these leaders of the village. While a lamp wais lit in a holy city, the organizers narrated its cultural importance as well as the effectiveness of Hindu unity in that city. The climax of the Utsav was this: when the entire village lined up and began lighting the lamps on the borders of the nation, the political and caste leaders joined the people. The Utsav was organized by Swayamsevaks of RSS in the village.  As told to Team PANCHAAMRITAM by Shri G.Bhaktavatsalan, Saha Prant Prachrak , RSS, Uttar Tamilnadu.

SRIRANGAM RANGANATHA SWAMY TEMPLE

Lakhs of devotees enter the gate way of plenty and prosperity on
Vaikunta Ekadasi day-

-V. Shanmuganathan



Sri Rangam is the first and foremost among the 108 Vaishnava Holy
places called divyadesas. The temple is gigantic in size and in the
shape of pranava. The temple complex spreads over 156 acres of land.
It has seven Prakaras or enclosures. These enclosures are formed by
thick and huge rampart walls which run round to sanctum. The total
length of these seven walls is 32,592 feet or over six miles. There
are magnificent towers in all prakaras providing a unique sight to any
Visitor. The latest addition is the 236 feet high stupendous thirteen
tired Rajagopuram built at the southern rampart by the late 44th
Jeeyar of Sri Ahobila Mutt and consecrated in the year 1987 in a grand
manner. Famous music composer Ilayaraja contributed huge amount for
the construction of most beautiful Temple Tower. SRIGANGAM temple has
a main shrine where the Lord Ranganatha is found in a lying posture.
It is a charming idol of beauty and grace. There are also subshrines
for Rama, Krishna, Andal, Mahalakshmi, Hanuman, Garuda etc and for all
the acharyas. The temple is garlanded by the Twin Rivers Kaveri and
Kollidam. The temple is believed as Vaikuntam itself, the abode Lord
Vishnu where he sits in all splendour and majesty. The true worship of
Lord Vishnu, according to the belief of devotees, brings all benefits
unattainable else where. The four towers are compared to the four
Vedas, as the fountain head of knowledge. Chola king who ruled from
‘Uraiyur’ was a devotee of the temple. He cleared the forest,
constructed all the essential parts of the temple, laid down flower
gardens, instituted temple services and forms of worship.



Architecturally the temple of Srirangam is unique among the great
temples of south India. The sculptures found in the temple are some of
the finest. The 1000 pillared mandapa, Horse court, Garuda  Mandapa,
Ranga  Vilasam, Vasantha Mantapa, the mirror room are worth seeing.
References to the greatness of this place abound in Tamil literature
starting from the sangam  works. Silappathikaram, a great Tamil epic
beautifully describes the sayanam (lying posture) of Sri Ranganatha.
Kambar, the great Tamil poet, had the rehearsal of his Ramayana done
in this temple.







With the rise of Buddhism and Jainism, there arose a strong Vaishnava
resurgent movement. It was spearheaded by the Alwars who brought
religion to the heart of the people.  They composed the exuberant
devotional songs called “Nalayira Divya Prabandham’. They visited the
shrines and sung songs in praise of the Lord Vishnu. Those temples are
called holy places or Divya Desas.



The Kings and their Chiefs vied with one another in bestowing the
respect on the temple by the gifts of land and gold. After the Cholas,
the pallavas, Pandyas, the Hoysula and the Vijayanagar Emperors and
the Nayak Kings took care of the shrine and made significant
donations. One Chola king gifted 30 gold lamps and 1000 holed gold
plate was offered for performing ‘Sahasra dhara’ abhishekam.



Malik Kafur invaded south India during 14th century and captured
Tiruchirapalli. Fearing destruction at their hands, the priests of
Srirangam Temple removed the deity to Tirupathy and kept it for some
time there. After the Mohamedans left Trichirapalli, it was thought
safe to bring the deity back to Srirangam. This was done by Gopnna
Udaiyar, the chief of Gingee. Gopanna took the deity from Tirupati and
brought it to Srirangam and reinstalled it in the temple after
performing the consecration ceremony. This was done in A D 1371-72. An
inscription in the temple testifies to this fact.   There are plenty
of inscriptions which throw considerable light on the Vijaya Nagar
emperors’ devotion to the temple. A continuous flow of high
dignitaries from the Empire frequented the temple and made offerings
on a big scale.



Tamilnadu state is ruled by non believers for more than four decades.
They have burnt copies of Ramayan and publicly destroyed Vinayaka
idols. But they could not stop the devotees from visiting the temple.
Day by day spirituality and religious faith is increasing in an
enormous way. This year, lakhs of devotees will be visiting SRI RANGAM
temple on Vaikunta Ekadasi day, that falls on 17th Decembers
2010.Because it is considered as very auspicious and spiritually
excellent for meditation.



Vaikunta Ekadasi is an important festival in Srirangam Temple
dedicated to Lord Vishnu in the tamil month of margashish. One of the
main doors which is normally kept closed through out the year is
thrown open only on the morning of this day. It is widely believed
that the gates to Vaikunta – the abode of  Mahavishnu – is opened on
Ekadasi day. Scores of devotees Queue up to pass through the gate way
of plenty and prosperity. Gifting a copy of Bhagavad Gita to a
deserving person on this day will bring profound blessings of Lord
Krishna. Ancient texts recommends that the mornings in this month are
ideal for worship of Lord Krishna.



There is a nice incident telling about the removal of untouchability.
Thiruppanalwar was a dalit. In those days, he could not enter the
temple as a dalit. He used to worship Lord Ranganatha standing at a
distance and sing devotional songs. Sri Ranganatha in order to bless
this devotee appeared in the dream of a priest and asked him to carry
the dalit Saint on his shoulders to his very presence in the temple.
It was done and that Saint attained bliss.



The devotees expression of reverence and adoration for main deity is
remarkable. The worshippers firmly believes that SRIRANGAM is earthly
heaven.

Be Safe- Thought I should share

This happened in Mumbai......
It all started when I received a call from someone claiming that he
was from my mobile service provider and he asked me to shutdown my
phone for 2 hours for 3G update to take place. As I was rushing for a
meeting, I did not question and shutdown my cell phone.

After 45 minutes I felt very suspicious since the caller did not even
introduce his name. I quickly turned on my cell phone and I saw
several missed calls from my family members and the others were from
the number that had called me earlier - 3954380. I called my parents
and I was shocked that they sounded very worried asking me whether I
am safe. My parents told me that they had received a call from someone
claiming that they had me with them and asking for money to let me
free. The call was so real and my parents even heard 'my voice' crying
out loud asking for help. My parent was at the bank waiting for next
call to proceed for money transfer. I told my parents that I am safe
and asked them to lodge a police report.

Right after that I received another call from the guy asking me to
shutdown my cell phone for another 1 hour which I refused to do and
hung up. They keep calling my cell phone until the battery had run
down. I myself lodged a police report and I was informed by the
officer that there were many such scams reported. MOST of the cases
reported that the victim had already transferred the money! And it is
impossible to get back the money.
Be careful as this kind of scam might happen to any of us!!!  Those
guys are so professional and very convincing during calls. If you are
asked to shut down your cell phone for updates by the service
provider, ASK AROUND! Your family or friends might receive the same
call.
Unquote....

Be Safe and Stay Alert! Please pass around to your family and friends!

Zero tolerance, secret billions

Dear Important Sangh Karayakarthas, Vanakkam.

Please open the link for the article titled "Zero tolerance, secret billions"; by Shri S Gurumurthy  that appeared in today's The Indian Express . It is not merely an exposure of Sonia Gandhi's secret billions [some $11 billions] in Swiss accounts abroad, it catalogues how the media here and abroad have been writing about it for almost two decades,with deafening silence from the family. It is necessary to ensure that this issue of Sonia's billions is linked to the $462 billions staked abroad by Indians. This can be a bigger issue than any single issue, as it clearly identifies the person in corruption, fountainhead of corruption.

The amount stashed abroad was disputed once, by the congress and even by some amongst us for want of credible evidence, but the Global Financial Integrity has confirmed this now. Prof Vaidyanathan of IIM Bangalore has done excellent work on this. He is in the process of preparing a big follow up report.

The New Indian Express has the courage to carry this item. At least some of us should congratulate Manoj for his guts.

Please circulate this mail as widely as possible



http://epaper.expressbuzz.com/NE/NE/2011/01/03/ArticleHtmls/03_01_2011_009_004.shtml?Mode=1

If the above, which presents the article as in E-paper, as it appears in the paper, does not open, please open the following link

http://expressbuzz.com/opinion/columnists/zero-tolerance-secret-billions/236261.html

காக்கிக்குள்ளும் ஈரம்

மாத ஊதியத்தில் சமூக சேவை: காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கு

வாகன சோதனையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் முறைகேடாக பணம் பறிக்கும் போலீசாரை பார்த்திருக்கிறோம். ஆனால், தங்களது ஊதியத்தில் மாதம் 100 ரூபாய் ஒதுக்கி ஆதரவற்றோருக்கு உணவும், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு நிதியும் வழங்கும் போலீசாரை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆம், பிறர் அறியாத வகையில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படையில் பணி யாற்றும் 100 போலீசார்.
தமிழக காவல்துறையில் சமீபகாலமாக "போலீஸ் இமேஜ்' குறித்து அதிகம் பேசப்படுகிறது. இத்துறையில் பணியாற்றும் சிலரது கரடுமுரடான அணுகுமுறை, பண முறை கேடுகளால் ஒட்டுமொத்த போலீசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு "போலீஸ் இமேஜ்' அடிவாங்குகிறது. இதை தூக்கி நிறுத்த பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள் போலீசாருக்கு நடத்தப்பட்டு, தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. "ஸ்டேஷனுக்கு புகார் மனுவுடன் வருவோரை கனிவுடன் வரவேற்று, குறைகளை விசாரித்து உடனுக்குடன் தீர்வு காணுங்கள்; பண முறைகேடுகளை முற்றிலுமாக தவிருங்கள்; வழக்கு விசாரணை, என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாதீர்கள்; பொதுமக்களுடனான நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், பலரும் இதை பின்பற்றுவதாக தெரியவில்லை.

இந்நிலையில், ஏழைக்குழந்தைகள் பயிலும் பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும் முயற் சிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கோவை மாநகரில் இதற்கான திட்டம் துவக்கப்பட்டு 15 பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் மூலமாக, போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான சேவை பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, எவ்வித விளம்பரமும் இல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கமுக்கமாக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படை போலீசார். இப்பிரிவில் பணியாற்றும் 100 போலீசார் இணைந்து, "காவலர் காக்கும் கரங்கள்' என்ற பெயரில், பதிவு செய்யப் படாத சேவை அமைப்பை நடத்தி வருகின்றனர். இதில், அங்கம் வகிக்கும் போலீசார் மாதம் தோறும் தலா 100 ரூபாயை தங்களது ஊதியத்தில் இருந்து வழங்கி சேவை நிதியை பராமரிக்கின்றனர்.

இந்நிதியை கொண்டு கோவையிலுள்ள அனாதை குழந்தைகள் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் அமைப்புகளுக்கு உணவு, உடைகளை வழங்குகின்றனர். தவிர, கல்விக்கட்டணம் செலுத்த முடியாத ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்று நிதி வழங்கி வருகின்றனர். இதற்காக, யாரிடமும் கையேந்தாமல் முழுக்க, முழுக்க தங்களது ஊதியத்தின் மூலம் கிடைக்கும் நிதியையே பயன்படுத்துகின்றனர். இதிலென்ன வியப்பு என்றால், இவர்களது ஒன்றரை ஆண்டு சேவை குறித்த விஷயம், அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், போலீசாரில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அந்த அளவுக்கு விளம்பரமின்றி சேவையாற்றி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, "சிறுதுளி' அமைப்பிடம் 1,100 மரக்கன்றுகளை பெற்று, போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம், போலீஸ் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நட்டு அக்கறையுடன் பராமரிக்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் "சிறுதுளி' அமைப்பிடம் விதை மற்றும் கன்று வளர்ப்புக்கான பைகளை பெற்று 300 மரக்கன்றுகளை வளர்த்து, திரும்ப ஒப்படைத்துள்ளனர். அடுத்ததாக, 5,000 மரக்கன்று வளர்த்து நகரின் பல இடங்களில் நட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, "காவலர் காக்கும் கரங்கள்' அமைப்பில் அங்கம் வகிக்கும் போலீசார் கூறியதாவது: நாங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதில் வியப்பு ஏதுமில்லை; அது, எங்களது கடமை; இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் கூட. கல்வி, வேலை வாய்ப்பு பெற்று சமூகத்தில் நல்ல முறையில் வாழும் வாய்ப்பு பெற்ற நாங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு உதவுகிறோம்.

மாதம் இருமுறை அனாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உணவளித்து உதவுகிறோம். இதன் மூலமாக ஒருவித ஆத்மதிருப்தியும், ஆனந்தமும் கிடைக்கிறது. அடுத்ததாக, எங்களது குடும்ப உறுப்பினர்களையும் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். மனைவி, குழந்தைகளுடன் சென்று, ஆதரவற்றோருக்கான உதவிகளை செய்யவுள்ளோம். இது, எங்களது குழந்தைகள் உலக நடப்புகளையும் சமூக ஏற்ற, தாழ்வுகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும். அதுமட்டுமின்றி, நாமும் ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் குழந்தைகளிடம் ஏற்படும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

தூண்டுகோல்


December 31, 2010
கன்யாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு குடும்பம். தாய், தந்தை, இரு பெண் குழந்தைகள். யாருக்கும் எந்த ஊனமும் இல்லை. ஆனால், குடும்பத்தின் தொழில் பிச்சை எடுப்பது.
இந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து கவனித்து வந்த சேவாபாரதி தொண்டர்கள், முதலில் இரு பெண் குழந்தைகளையும் சந்தித்துப் பேசினர்.
அந்த வழியாகப் பள்ளிக்குப் போகும் அவர்கள் வயதுப் பிள்ளைகளைக் காட்டி, “உங்களுக்கும் அவர்களைப் போல் பள்ளிக்குப் போக ஆசை இல்லையா?” என்றார்கள்.
அதற்கு அந்தப் பிள்ளைகள், “எங்களுக்கும் ஸ்கூலுக்குப் போகணும், படிக்கணும், நல்ல வேலைக்குப் போய் மற்றவர்களைப் போல் சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் வாழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வசதியில்லை. அப்பா, அம்மா படிக்கக் காசு கொடுக்காமல் பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்டனர்.
உங்களைப் படிக்க வைத்தால் ஒழுங்காகப் படிப்பீர்களா?” என்று சேவாபாரதி தொண்டர்கள் திருப்பிக் கேட்டனர்.  அப்பா, அம்மா சம்மதித்துப் பள்ளிக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் படிப்போம்!என்றனர்.
உடனே அந்தச் சிறுமிகளை, அவர்களின் பெற்றோரிடம் அழைத்துச் சென்ற சேவாபாரதி தொண்டர்கள், சிறுமிகளைப் படிக்க வைக்கத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
பெற்றோரும் சம்மதித்தனர்!
உடனடியாக அருகில் இருந்த அரசுப் பள்ளியில் சிறுமிகள் இருவரையும் சேர்த்த சேவாபாரதி தொண்டர்கள், அவர்களுக்குத் தேவையான சீருடை, நோட்டு, புத்தகம் உட்பட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
சிறுமிகளும் பள்ளிக்குச் செல்ல தொடங்கினர்.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சிறுமிகள் சேவாபாரதி தொண்டர்களை சந்தித்து ஒரு விஷயத்தை கூறினார்கள்.
நாங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு எங்களைப் போன்ற சக மாணவிகளுடன் பேசும் போது அவர்களது அப்பாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வேலை செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் எங்கள் அப்பாவை பற்றி என்ன சொல்வது என்று அப்பாவிடமே கேட்டோம். அன்று முதல் அவர் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டுக் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து வருகிறார்என்றனர்.
சேவையில் நாம் (தொடர்ந்து) ஈடுபட நமக்கு இதைவிட வேறு என்ன தூண்டுகோல் வேண்டும்?!
Source: http://sevabharathitn.org/